என் மலர்tooltip icon

    உலகம்

    ஜப்பானில் இன்று சுனாமி தாக்கும் என்ற பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா?
    X

    ஜப்பானில் இன்று சுனாமி தாக்கும் என்ற பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா?

    • ஜப்பானின் பாபா வங்கா என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகள் பரவலாக பேசப்பட்டது.

    எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர்.

    இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகி உள்ளது. இந்நிலையில் ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது. 1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

    அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

    இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.

    ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

    இதனால் இன்று மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஜப்பானியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக ஜப்பானின் டொகாரோ தீவுகளில் ஜூலை 3ஆம் தேதி 5.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது

    Next Story
    ×