search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job cuts"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 30 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் உள்ளனர்
    • பணிநீக்கத்தால் ரூ.100 கோடி சேமிக்க முடியும் என்றார் செய்தி தொடர்பாளர்

    குறைந்த கட்டண தனியார் விமான சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அரியானா மாநிலம், குர்காவோன் பகுதியை தலைமையிடமாக கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet).

    புது டெல்லி மற்றும் ஐதராபாத் நகரங்களை தளமாக கொண்டு 60 இந்திய நகரங்களையும், 13 சர்வதேச நகரங்களையும் இணைக்கிறது ஸ்பைஸ்ஜெட்.

    30 விமானங்களை கொண்டு சேவையாற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 9,000 பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வந்தது.

    ஜனவரி மாத சம்பளம் பல ஊழியர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட், தனது ஊழியர்களில் 15 சதவீதம் பேரை பணிநீக்க உள்ளதாக அறிவித்தது.

    இந்த உத்தரவு சுமார் 1,400 பணியாளர்களை பாதிக்கும் என தெரிகிறது.

    இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது:

    அனாவசிய செலவுகளை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.

    இதன் மூலம் மனித வளம் முறையாக பயன்படுத்தப்படவும், வருவாயை அதிகரிக்கவும், இந்திய வான்வெளி போக்குவரத்து துறையில் முன்னே செல்லவும் நிறுவனம் முயன்று வருகிறது.

    இந்த பணிநீக்க நடவடிக்கையின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி வரை சேமிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023 ஜனவரி மாதம் கூகுள் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது
    • 2024 ஜனவரி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது

    கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், கூகுள்.

    2015 அக்டோபர் மாதம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை (51) நியமிக்கப்பட்டார்.

    2023 ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.

    "இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்று சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.

    2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.

    சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

    நமது லட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டும்.

    சில பணிகள் தேவைப்படாது; தேவைப்படாதவை நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.

    இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை (layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டன.

    சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.

    இவ்வாறு சுந்தர் தெரிவித்துள்ளார்.

    தனது சுற்றறிக்கையில் எங்குமே "லே ஆஃப்" அல்லது "ஜாப் கட்ஸ்" எனும் பணிநீக்கத்தை குறிக்கும் வார்த்தைகளை சுந்தர் பிச்சை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில், புத்தாண்டு முதல் 2 வாரங்களிலேயே 45க்கும் மேற்பட்ட ஐடி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 7500க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கிய நிலையில், இது  தொடர்ந்தால் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என மென்பொருள் துறை ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.

    • சிட்டி குரூப்பில் உலகெங்கும் 2,39,000 பேர் பணியாற்றுகிறார்கள்
    • காலாண்டு அறிக்கையில் $1.8 பில்லியன் நஷ்டத்தை சிட்டி அறிவித்தது

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி முதலீடு மற்றும் நிதி சேவைகளுக்கான நிறுவனம், சிட்டி குரூப் (Citigroup).

    இந்நிறுவனத்தில் உலகெங்கும் 2,39,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

    இதன் காலாண்டு நிதி அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் அந்நிறுவனம் சுமார் $1.8 பில்லியன் தொகை நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிட்டி குரூப், வரும் இரண்டாண்டுகளில் தனது பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை (10 சதவீதம் பேர்) பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

    சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜேன் ஃப்ரேசர் (Jane Fraser), "2024 முக்கிய ஆண்டாக இருக்கும். நிறுவனத்தில் பல சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    "பணிநீக்க நடவடிக்கை ஒரு கடினமான செயல்தான். ஆனாலும், 2026 இறுதியில் 1,80,000 பேர் மட்டுமே பணியாற்றும் நிறுவனமாக சிட்டி குரூப் மாற்றப்படும்" என இதன் தலைமை நிதி அதிகாரி (CFO) மார்க் மேசன் (Mark Mason) தெரிவித்தார்.

    வங்கி துறையில் அமெரிக்காவின் பெரும் வங்கிகளில் முதல் 5 இடங்களில் உள்ளது சிட்டி.

    அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்குகள் 1.4 சதவீத சரிவை சந்தித்தன.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் பல துறைகளில் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் தனியார் வங்கி துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

    • உலகளவில் மக்களிடம் "வாங்கும் சக்தி" குறைந்து விட்டது
    • கடந்த ஆண்டே கூகுள் மற்றும் அமேசான் பல ஊழியர்களை நீக்கின

    கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

    உலகளவில் பெரும்பான்மையான மக்களிடம் "வாங்கும் சக்தி" (purchase power) குறைந்ததால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் குறைந்துள்ளது. நிறுவனங்களின் விற்பனையில் தேக்க நிலையையும், வீழ்ச்சியும் அதிகரித்து வருகின்றன.

    2022 மார்ச்சில் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் மற்றும் 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க-சீன வர்த்தக உறவில் நீடிக்கும் சிக்கல், சீனாவில் சரிய தொடங்கியுள்ள உள்நாட்டு பொருளாதாரம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    கடந்த வருடம் முதல் இதன் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியதால், உலகின் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்க ஆட்குறைப்பை தொடங்கின.

    "லே ஆஃப்" (layoffs) அல்லது ஜாப் கட்ஸ் (job cuts) என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டே அமேசான், மைக்ரோசாப்ட், காக்னிசன்ட் மற்றும் கூகுள் உட்பட பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

    தற்போது அடுத்த சுற்றில் மேலும் பல ஊழியர்களை அமேசான் மற்றும் கூகுள் நீக்கியுள்ளது.

    அமேசான், முன்னரே ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் யூனிட்டில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது ப்ரைம் வீடியோஸ் (Prime Videos) மற்றும் எம்ஜிஎம் ஸ்டூடியோ (MGM Studios) கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை நீக்கியது.

    கூகுள், செலவினங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் அசிஸ்டன்ட், ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி), மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றியவர்களை நீக்கியது.

    பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

    • மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்காவில் பணி இழந்தனர்
    • அக்சென்சர் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது

    முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு, கடந்த 2023ல் பல தனியார் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிசான், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் இந்த சூழல் நிலவியது.

    உலகம் முழுவதும் சுமார் 2.6 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள். மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் (1.79 லட்சம் பேர்) அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    16,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா 2-ஆம் இடத்தில் உள்ளது.

    13,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஜெர்மனி 3-ஆம் இடத்தில் உள்ளது.

    11,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சுவீடன் 4-ஆம் இடத்திலும், 9400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து 5-ஆம் இடத்திலும் உள்ளது.

    இந்தியாவில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மட்டுமே 1000 பணியாளர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமெரிக்க-அயர்லாந்து நாடுகளை மையமாக கொண்ட மென்பொருள் பெருநிறுவனமான அக்சென்சர் (Accenture) 19,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது.

    இணையதள கல்வி நிறுவனமான பைஜு'ஸ் (Byju's) சுமார் 4 ஆயிரம் பணியாளர்களையும், இணைய வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் 500 பணியாளர்களையும் நீக்கியது.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தோன்றியுள்ள மந்தமான பொருளாதார சூழல், அதிகரிக்கும் விலைவாசியினால் மக்களிடம் சேமிப்பு குறைதல், தொழில்நுட்ப சேவைக்கான தேவை குறைவு, உலகளாவிய போர் சூழல், பணியாளர்களுக்கான கட்டுக்கடங்காத சம்பள உயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை கூறப்படுகின்றன.

    உலகளாவிய பொருளாதார நிலைமை மேலும் சரிவடைந்தால், பணிநீக்கங்கள் இவ்வருடமும் தொடர்வது மட்டுமின்றி அதிகரிக்கலாம் என மனித வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • பல "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன
    • பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022-ஐ விட 2023ல் அதிகம்

    2022 வருட பிற்பகுதியில் அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களை கூட்டம் கூட்டமாக பணிநீக்கம் செய்யும் "லே ஆஃப்" (layoff) நடைமுறை தொடங்கியது.

    இவ்வருடமும் அந்த நடைமுறை தொடர்வதுடன் பணிநீக்கங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், யாஹு, மெடா மற்றும் ஜூம் உள்ளிட்ட பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

    பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.

    பணியை இழந்தவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி வருகிறது.


    அமெரிக்காவில் ஹெச்1-பி விசா முறையில் பணிக்காக சென்றவர்கள் பணியில்லாமல் சில மாதங்களே வசிக்க முடியும். வேறு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இச்சூழலில் வேலை இழந்தவர்கள் மாற்று வேலையை தேடி வருகிறார்கள்.

    கடந்த டிசம்பர் 21 வரை 2,24,503 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2022 ஆண்டு எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க பொருளாதார மந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டும் இது தொடரலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • டீஃப்லேஷன் ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்
    • சீனாவில் 2 ஆண்டுகளாக தென்பட்ட வளர்ச்சி மாறி டீஃப்லேஷன் தொடங்கி விட்டது

    பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும்.

    ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான பணத்தில் அதிக அளவிலான பொருட்களை வாங்க முடியும். இந்நிலையை டீஃப்லேஷன் (deflation) எனப்படும் பணவாட்டமாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சீனாவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஜூலை மாதம் பொருளாதாரம் டீஃப்லேஷன் நிலையை அடைந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அங்கு பொருளாதாரம் மீண்டு, வளர்ந்தும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முதல் முறையாக இந்நிலை தற்போது தோன்றியுள்ளது.

    சீனாவில் மக்கள் செலவினங்களை மிகவும் குறைத்து வருவதால் பொருளாதாரம் வாட்டத்தை அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் 25 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகித்த ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவும் இதற்கு மற்றொரு காரணம்.

    பணவீக்கத்தின் முக்கிய அளவீடான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) கடந்த ஜூலை மாதம் 0.3 ஆக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

    நுகர்வோரின் மனநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செலவு செய்யும் எண்ணம் மறைவதுதான் பணவாட்டம் ஏற்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    இது ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்களால் வர்ணிக்கப்படுகிறது.

    நுகர்வோர் குறைவதால் உற்பத்தியை குறைக்கவும், புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைக்கவும், தேவைப்பட்டால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் நிறுவனங்கள் திட்டமிடும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

    சீனாவின் பொருளாதார வாட்டம் குறித்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் சரிவை சந்தித்தன.

    சீனாவின் பொருளாதார மாற்றம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஜூம் நிறுவனம்.
    • சுமார் 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.

    இந்நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.

    ×