செய்திகள்
பாய்லர் வெடித்ததால் இடிந்த சமையலறை

பீகாரில் சமையலறை பாய்லர் வெடித்து 4 பேர் பலி

Published On 2019-11-16 05:22 GMT   |   Update On 2019-11-16 05:22 GMT
பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மோதிஹரி:

பீகார் மாநிலம், மோதிஹரி அருகே சுகாலி பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் இன்று அதிகாலை சயைமல் செய்துகொண்டிருந்தபோது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News