செய்திகள்
பீகாரில் சமையலறை பாய்லர் வெடித்து 4 பேர் பலி
பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மோதிஹரி:
பீகார் மாநிலம், மோதிஹரி அருகே சுகாலி பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் இன்று அதிகாலை சயைமல் செய்துகொண்டிருந்தபோது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.