செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீரில் கார்-லாரி பயங்கர மோதல் - 5 பேர் பலி

Published On 2019-11-06 11:45 GMT   |   Update On 2019-11-06 11:45 GMT
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று கார் மீது லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுச்சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

காஷ்மீரின் தெற்கு மாவட்டமான அனந்த்நாக்கில் உள்ள வான்ப்க் என்ற பகுதியை லாரி கடந்த போது சாலையின் மறுபுறம் வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர். 



இதையடுத்து, படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அனைவரின் உயிரும் பிரிந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News