செய்திகள்
ஏழை குழந்தைகளுக்கு விருந்து அளிக்கும் ஜிதேந்திர பட்வாரி

இப்படியும் ஒரு மந்திரி: ஏழை குழந்தைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் தீபாவளி விருந்து

Published On 2019-10-28 09:14 GMT   |   Update On 2019-10-28 09:14 GMT
மத்திய பிரதேசத்தில் ஒரு மந்திரி தீபாவளியையொட்டி ஏழைக்குழந்தைகளுக்கு 5 நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்து உபசரித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் அம்மாநில உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்திற்கான மந்திரியுமான ஜிதேந்திர பட்வாரி ஏழை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியுள்ளர்.



அவர் அம்மாநிலத்தில் உள்ள ஏழை குழந்தைகள் சிலருக்கு இந்தூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்தார். மந்திரி ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தங்கள் தீபாவளியை கொண்டாடினர்.

நவீன அரசியலில் ஏழைகள் அரசியல்வாதிகளை சந்திப்பது எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் மந்திரி ஒருவர் ஏழை குழந்தைகளை அழைத்து 5 நட்சத்திர ஓட்டலில் உணவு வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  
Tags:    

Similar News