செய்திகள்
கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் - யோகி ஆதித்யாநாத் வலியுறுத்தல்
முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்யப்பட்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென உ.பி. முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்யப்பட்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
சட்டரீதியாக அவர்களுக்கான நீதியும் நிவாரணமும் கிடைக்கும் வரை இந்த தொகை அளிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்யப்பட்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
சட்டரீதியாக அவர்களுக்கான நீதியும் நிவாரணமும் கிடைக்கும் வரை இந்த தொகை அளிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.