செய்திகள்
மாதிரிப் படம்

காஷ்மீரில் அரசியல்வாதியின் மெய்க்காப்பளரின் ஏ.கே.47 துப்பாக்கி பறிப்பு - கிஷ்த்வாரில் ஊரடங்கு உத்தரவு

Published On 2019-09-13 10:10 GMT   |   Update On 2019-09-13 10:10 GMT
காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகரின் மெய்க்காப்பளரிடம் இருந்து மர்மநபர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறித்துச் சென்றதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ஒன்றான மக்கள் ஜனநாயக கட்சியின் கிஷ்த்வார் மாவட்ட தலைவராக இருப்பவர் ஷேக் நசிர். இவருக்கு பாதுகாப்பாக 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய மெய்க்காப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஷேக் நசிரின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கியதுடன் மெய்க்காப்பளரிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பான தகவலறிந்த போலீசார் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, துப்பாக்கியை பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News