செய்திகள்
பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி பாடிக் கொண்டிருந்தபோது சரியும் காட்சி

விழா மேடையில் பாடிக்கொண்டு இருக்கும்போதே பாடகர் உயிரிழந்த சோகம்

Published On 2019-09-05 10:05 GMT   |   Update On 2019-09-05 10:05 GMT
கர்நாடகாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும்போதே பாடகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் ஜெர்ரி பஜ்ஜோடி. இவர் பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பல்வேறு விழா தருணங்களில் இசை கச்சேரி நடத்தி வருகிறார்.

கடந்த 2ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கன்னட பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார். திடீரென மேடையில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு மயக்கம் வந்ததாக நினைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜெர்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், சடன் கார்டியாக் அரஸ்ட்டால் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

விழா மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே, ஜெர்ரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
Tags:    

Similar News