செய்திகள்
பாராளுமன்றம்

மாநிலங்களவை கூட்டத்தொடர் 7-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2019-07-26 19:12 GMT   |   Update On 2019-07-26 19:12 GMT
மக்களவை கூட்டத்தொடர் ஆகஸ்டு 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை கூட்டத்தொடரும் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக கூறி மக்களவை கூட்டத்தொடர் ஆகஸ்டு 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதேபோல நேற்று மாநிலங்களவை கூடியதும், சபைத் தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையின் கூட்டத்தொடரையும் வருகிற 7-ந்தேதி வரை நீட்டிப்பதாக கூறினார். ஆனால் இனிவரும் நாட்களில் கேள்வி நேரம் இருக்காது, மசோதா தொடர்பான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News