செய்திகள்
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது- இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பை:
மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.