செய்திகள்
கொலை செய்யப்பட்ட பெண்

நடத்தையில் சந்தேகம் அடைந்து காதலியை கொலை செய்த காதலன்

Published On 2019-07-15 13:56 GMT   |   Update On 2019-07-15 13:56 GMT
மகாராஷ்ரா மாநிலத்தில் ஆண் நண்பர்களுடன் தனது காதலி நெருங்கிப் பழகுவதாக சந்தேகமடைந்த வாலிபர் இளம்பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
நாக்பூர்:

மகாராஷ்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19 வயது நிரம்பிய பெண் குஷி பாரிக்கர். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளூரில் நடைபெறும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் இவர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜூன் 12) பாந்தூர்ணா-நாக்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண்ணின் பிணம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, உயிரிழந்த பெண் குஷி பாரிக்கர் என கண்டுபிடித்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் சமூக வலைதளங்களில் ஆண் நண்பர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் கிடைத்தது. 

இதையடுத்து, ஷ்ரப் ஷேக் என்ற அந்த நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் உயிரிழந்த பெண்ணின் காதலன் எனவும், குஷி பாரிக்கர் மாடலிங் துறையில் உள்ள வேறு சில ஆண்களுடன் நெருக்கமாக பழகியதாக சந்தேகம் அடைந்து அவரின் முகம் மற்றும் தலையில் அடித்து க்கொன்றதாகவும் கூறினார். 

இதையடுத்து, அஷ்ரப் ஷேக்கை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.  
Tags:    

Similar News