செய்திகள்
கேரளா சிறைக் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் காட்சி

சிறைக்கைதிகளின் ‘பிரியாணி காம்போ ரூ.127’ ஆன்லைனில் அமோக விற்பனை -என்ன ஸ்பெஷல்?

Published On 2019-07-12 03:59 GMT   |   Update On 2019-07-12 08:24 GMT
கேரளா மாநிலத்தின் சிறையில் உள்ள கைதிகள் தயாரிக்கும் ‘பிரியாணி காம்போ ரூ.127’ பேக்கேஜ் ஆன்லைனில் அமோக விற்பனையாகி வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்பதை பார்ப்போம்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் வையூர் மத்திய சிறைச்சாலையில், கைதிகளை நல்வழிப்படுத்த சிறை நிர்வாகிகள் இணைந்து ஒரு முடிவினை மேற்கொண்டனர். கைதிகளை சமைக்க வைத்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த சிறையில் கைதிகளே நாள்தோறும் சப்பாத்திகளை போட்டு வந்துள்ளனர். அதிகப்படியான சப்பாத்திகள் போடப்படும்போது அதனை விற்றும் வந்துள்ளனர்.

இந்த சிறைக்கைதிகளின் சப்பாத்திகளுக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, பேக்கரி வகைகள், அசைவ குழம்பு வகைகள் மற்றும் பிரியாணி ஆகியவை சமைத்து வைத்து சிறையில் உள்ள கவுண்டர்களில் விற்பனை செய்ய தொடங்கினர்.



இந்த உணவுப் பொருட்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன், சிறையின் வருவாயும் அதிகரித்தது. இதனையடுத்து சிறை நிர்வாகம் இந்த விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் மக்களுக்கு உணவுகளை கொண்டு செல்ல ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரியாணி காம்போ பேக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரூ.127 விலைக் கொண்ட இந்த காம்போ பேக்கேஜில்,



300 கிராம் பிரியாணி
சிக்கன் லெக் பீஸ்
3 சப்பாத்திகள்
ஒரு கப் கேக்
சாலட்
ஊறுகாய்
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்

ஆகியவை வழங்கப்படுகின்றன. இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை வகைகளா? என கேரள மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை குவித்து வருகின்றனர். இந்த வரவேற்பை கண்டு சிறை நிர்வாகமும், கைதிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.






Tags:    

Similar News