செய்திகள்
ரெயில்வே பெண் போலீசார்

ரெயில்வே துறையில் 9 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் - 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு

Published On 2019-06-28 10:32 GMT   |   Update On 2019-06-28 10:32 GMT
ரெயில்வே துறையில் காலியாகும் 9 ஆயிரம் போலீஸ் பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவிலேயே ராணுவத்துக்கு அடுத்தபடியாக அதிகமான பணியாளர்களை கொண்ட மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை உள்ளது.

வயது மூப்பு காரணமாக பலர் பணி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் ரெயில்வே துறையில் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.



இந்நிலையில், ரெயில்வே போலீஸ் துறையில் விரைவில் காலியாகும் சுமார் 9 ஆயிரம் கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News