செய்திகள்

காஷ்மீர் ஹுரியத் மாநாடு தலைவர் வீட்டுக் காவலில் அடைப்பு

Published On 2019-06-22 10:22 GMT   |   Update On 2019-06-22 10:22 GMT
காஷ்மீர் ஹுரியத் மாநாடு பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் மிர்வாயிஸ் மவுலவி உமர் பாருக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.
ஜம்மு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இயங்கி வரும் காஷ்மீர் ஹுரியத் மாநாடு பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் மிர்வாயிஸ் மவுலவி உமர் பாருக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.



ஸ்ரீநகரில் உள்ள மிர்வாயிஸ் மவுலவி உமர் பாருக் வீட்டுக்கு இன்று பிற்பகல் வந்த போலீசார் தங்களது அனுமதி இல்லாமல் அவர் வெளியே எங்கும் செல்லக் கூடாது என தடை விதித்துள்ளதாக காஷ்மீர் ஹுரியத் மாநாடு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News