செய்திகள்

பீகாரில் சோகம் - லாரி மோதி 7 பேர் பலி

Published On 2019-04-05 15:31 GMT   |   Update On 2019-04-05 15:31 GMT
பீகார் மாநிலத்தில் சாலையில் நின்றிருந்த மக்கள் மீது லரி வேகமாக மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #BiharAccident
பாட்னா:

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தனர். கொரியா பகுதியில் வந்தபோது, திடீரென லாரியின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால் சாலையில் இருந்த மக்கள் மீது லாரி வேகமாக மோதி கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #BiharAccident
Tags:    

Similar News