செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

Published On 2019-03-11 02:24 GMT   |   Update On 2019-03-11 02:24 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
40 வீரர்கள் மரணமடைந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் சார்பிலும் பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது.



இரு தரப்புக்கு இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கவராதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JammuKashmir #Encounter

Tags:    

Similar News