செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் லாலு கட்சி எம்.எல்.ஏ. கைது

Published On 2019-02-22 07:36 GMT   |   Update On 2019-02-22 08:20 GMT
டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் வந்த லாலு கட்சி எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். #MLAarrest

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகர்.

டெல்லியில் தங்கி இருந்த இவர் இன்று காலை விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றார்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள். எம்.எல்.ஏ. வைத்திருந்த பையில் 10 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை வைத்திருப்பதற்கு அவரிடம் உரிமம் இல்லை.

மேலும் விமான பயணத்தில் துப்பாக்கி தோட்டா கொண்டு செல்லவும் தடை உள்ளது. எம்.எல்.ஏ. சந்திரசேகர் பலத்த பாதுகாப்பையும் மீறி  விமான நிலையத்துக்குள் நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MLAarrest

Tags:    

Similar News