ஆந்திராவில் சோகம் - சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 5 மாணவர்கள் பலி
திருமலை:
ஆந்திர மாநிலம் குண்டூரில் இயங்கி வரும் தனியார் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஒரே காரில் குண்டூரில் இருந்து விஜயவாடாவிற்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற கார் குண்டூர் அடுத்த லால்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்த குண்டூர் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய 2 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #AndhraPradeshCarAccident