செய்திகள்

இன்று மாலை நடை திறப்பு - சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு

Published On 2018-11-16 07:41 GMT   |   Update On 2018-11-16 07:41 GMT
சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களை கருத்தில் கொண்டு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 41 நாட்களுக்கு கோவில் சாமி தரிசனத்திற்காக திறந்து இருக்கும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால் மாநில அரசு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் சபரிமலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களை கருத்தில் கொண்டு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவங்கல் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். #Sabarimala #SabarimalaTemple
Tags:    

Similar News