செய்திகள்

நாக்பூரில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி

Published On 2018-10-09 20:22 GMT   |   Update On 2018-10-09 20:22 GMT
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #RoadAccident


மும்பை :

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் - கட்சிரோலி தேசிய நெடுஞ்சாலையில் உம்ரெட் எனும் பகுதியில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். #RoadAccident
Tags:    

Similar News