search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus truck collision"

    • கண்டெய்னர் வாகனத்தை நிறுத்துமாறு போக்குவரத்து காவலர்கள் சைகை காட்டினர்
    • தனது இதயம் வலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வலைதளத்தில் தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது சத்ரபதி சம்பாஜி நகர் (Chhatrapati Sambhaji Nagar). இந்நகரை உள்ளடக்கிய சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ளது சம்ருத்தி விரைவுச்சாலை (Samruddhi Expressway).

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் பதர்டி மற்றும் இந்திராநகர் பகுதியை சேர்ந்த 35 பேர், புல்தானாவில் உள்ள சைலானி பாபா தர்காவிற்கு ஒரு தனியார் மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சம்ருத்தி விரைவுச்சாலையில் வைஜாபூர் பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது, அந்த பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் டிரக் வாகனத்தை சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை செய்தனர். இதனையடுத்து, அந்த கண்டெய்னர் ஓட்டுனர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காக திருப்பினார்.

    அப்போது அதன் பின்னே வந்த அந்த மினி பேருந்து, கண்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த மினி பேருந்து உருக்குலைந்து போனது.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்களும் போக்குவரத்து அதிகாரிகளும் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர். விரைந்து வந்த அவசர உதவி சேவை ஊர்தியில், காயமடைந்த 17 பேர் சம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர் வைஜாபூர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இவ்விபத்தில் அந்த பேருந்தில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு 4-மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த விபத்து செய்தி கேட்டு என் இதயம் வலிக்கிறது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் தெரிவித்தார்.

    விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பஸ் நிலை தடுமாறி அந்த லாரியின் வலது புறத்தில் மோதி மீண்டும் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதியது.
    • விபத்தால் சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்த தேனிக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் கருப்புசாமி ஓட்டி வந்தார். இந்த பஸ் நேற்று இரவு 4 மணி அளவில் விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி அருகே உள்ள அழுக்கு மேம்பாலம் மேலே சென்று கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பே சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் டாரஸ் லாரி திடீரென இடது புறத்தில் இருந்து வலது புறம் வந்தது. அப்போது பின்னால் சென்ற பஸ் நிலை தடுமாறி அந்த லாரியின் வலது புறத்தில் மோதி மீண்டும் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில்மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி, பஸ்சில் பயணம் செய்தபயணிகள் கோவி ந்தராஜ், ராஜமாணிக்கம், ராஜாமணி, கண்ணன், ஜெயஸ்ரீ ,மீரா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்கள் உடனடியாக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து ஏற்பட்ட வாகனங்களை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #RoadAccident


    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் - கட்சிரோலி தேசிய நெடுஞ்சாலையில் உம்ரெட் எனும் பகுதியில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், படுகாயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். #RoadAccident
    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Karimnagaraccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று வராங்கல் மாவட்டத்திலிருந்து கரீம்நகருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தானது கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள செங்கர்லா கிராமத்திற்கு அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனஉறுதியளித்தார். #Karimnagaraccident
    ×