செய்திகள்

மத்தியபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தனித்துபோட்டி - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

Published On 2018-10-06 09:08 GMT   |   Update On 2018-10-06 09:08 GMT
மத்தியபிரேதச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். #MadhyaPradeshelection #AkhileshYadav

லக்னோ:

மத்தியபிரேதச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இது காங்கிரசுக்கு பின்னடைவு ஆகும்.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருந்தார். தற்போது அகிலேஷ் யாதவும் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கிறார். #MadhyaPradeshelection #AkhileshYadav

Tags:    

Similar News