என் மலர்
நீங்கள் தேடியது "samajwadi party"

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது 2 வாக்குச்சாவடிகளில் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் விவிபாட் கருவியில் தாமரை சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது.
அதோடு இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பலருக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓட்டு போட்ட பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படு மாநில டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சியினர் கூறினர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராம்பூரில் ஒன்பதாவது முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆசம் கான். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜெயப்பிரதாவை பா.ஜனதா நிறுத்தியுள்ளது.
ஆசம்கானால் தனது அரசியல் ஆசானான அமர்சிங்குடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறியவர் ஜெயப்பிரதா. இவருக்கும் ஆசம்கானுக்கும் இடையே ராம்பூரில் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெயப்பிரதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- எனக்கு இந்த பகுதி மக்களை 2004 முதல் தெரியும். அவர்களுக்கும் நான் சமாஜ்வாடி கட்சியில் எப்படி இருந்தேன் என்பதும் தெரியும். நான் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து பார்த்ததே இல்லை. என் பிறந்தநாளின் போது கோவிலுக்கு செல்லும் போது மசூதிக்கும் செல்வேன்.
ஆனால் ஆசம்கான் அப்படி இல்லை. எனக்கு இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு தரப்பிலும் இருக்கும் செல்வாக்கை பார்த்து பயந்துதான் 2009 முதல் அந்த கட்சியில் என்னை தனிமைப்படுத்தினார்.
கே:- சமாஜ்வாடி கட்சிக்கும் பா.ஜனதா கட்சிக்கும் என்ன வித்தியாசம்?
ப:- பா.ஜனதா என்பது தேசிய கட்சி. சமாஜ்வாடி மாநில கட்சி. ஒரு பெண் பிரபலமாகவும் அரசியல் வாதியாகவும் பா.ஜனதா கட்சியில் என் கவுரவமும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் நான் அவமானப் படுத்தப்பட்டேன். அங்கே நான் இழந்த கவுரவம் இங்கே கிடைத்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் மோசமான விதி முறைகளால் எனது சினிமா வாழ்க்கையை இழந்தேன்.
கே:- பொதுக் கூட்டங்களில் சினிமாவில் நீங்கள் பேசிய வசனங்களை பேச சொல்லியோ பாட சொல்லியோ கேட்கிறார்களா?
ப:- இல்லவே இல்லை. இந்த மக்களுடன் ஒரு அரசியல்வாதியாக 2004 முதல் இருக்கிறேன். தொடக்கத்தில் இதுபோன்ற கோரிக்கைகள் இருந்தன. இப்போது இல்லை. இந்த மக்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆசம் கான் போன்றவர்கள்தான் என்னை சினிமாக்காரராக பார்க்கிறார்கள்.
கே:- ஒருவேளை நீங்கள் எம்.பி.யாகி, மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தால் உங்களை மோடி அமைச்சரவையில் பார்க்க முடியுமா?
ப:- அப்படி ஒரு எதிர்பார்ப்போ எண்ணமோ என்னிடம் சுத்தமாக இல்லை. பா.ஜனதாவை பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வைப்பதே என்னுடைய நோக்கம். ஆனால் மோடி பிரதமரானால் எந்த பணி கொடுத்தாலும் அதில் ஈடுபட தயாராக இருக்கிறேன்.
கே:- ஜெயா பச்சன் சமாஜ்வாடியில் இருக்கிறாரே?
ப:- அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ActressJayaPrada
பிரபல நடிகை ஜெயபிரதா, சமாஜ்வாடி கட்சியில் இருந்தவர். சமீபத்தில், பா.ஜனதாவில் இணைந்தார். அவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின்பேரில், பிரோஸ் கான் மீது ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், “பெண்கள் குறித்து கட்சியினர் அநாகரிகமாக கருத்து கூறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனது கருத்து திரித்து கூறப்பட்டு விட்டதாக பிரோஸ் கான் விளக்கம் அளித்துள்ளார்.#FirozKhan #ActressJayaprada
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று சமாஜ்வாதி கட்சியின் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாநில தலைவர் இளங்கோ யாதவ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் எங்களது கட்சி போட்டியிடும்.
குறிப்பாக மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிதம்பரம், சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர் உள்பட 20 இடங்களில் போட்டியிடும்.
இந்த தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வார். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் எங்களை கூட்டணி அமைக்க அழைத்தால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
தமிழகத்தில் மதசார்பற்ற தி.மு.க. எங்களை அழைத்து பேசவில்லை. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்ரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #SamajwadiParty

பொதுவாக தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களின் நலனுக்காக அந்தந்த தொகுதிகளின் பிரதிநிதிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பார்த்து வருகின்றன. ஆனால் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க வேண்டிய எம்.எல்.ஏ. ஒருவரே, பெரும் நெருக்கடியில் சிக்கி தன்னை மீட்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்குள்ள அசாம்கார் மாவட்டத்தின் மேநகர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கல்ப்நாத் பஸ்வான். இவர் நேற்று சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
என் வாழ்நாளில் ரூ.10 லட்சத்தை நான் கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் நான் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அசம்காரில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பணம் வைத்திருந்த சூட்கேசில் பணம் இல்லை. அதை யாரோ திருடிச் சென்று இருக்கின்றனர்.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. நான் ஒரு பரம ஏழை. அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே நான் உங்களை கைகூப்பி கேட்கிறேன். இங்கிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன்?
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த சக உறுப்பினர்களும் வருத்தமடைந்தனர். அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா எழுந்து, எம்.எல்.ஏ. பஸ்வானை அமைதிப்படுத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் எனக்கூறிய மந்திரி, அந்த பணத்தை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிளித்தார்.
இதைத்தொடர்ந்தே கல்ப்நாத் எம்.எல்.ஏ. அமைதியானார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 71 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுபற்றி சமாஜ்வாடி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரஜேந்திர சவுத்ரி கூறியதாவது:-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பல்வேறு கட்டமாக சந்தித்து பேசினர். வெள்ளிக்கிழமையும் டெல்லியில் அவர்கள் சந்தித்து பேசினர். இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணிக்கு முதல்கட்ட ஒப்புதலை கொடுத்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாதத்திலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது.
இதுதவிர ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட இதர சிறிய கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதா? என்பது குறித்து அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்வார்கள். முடிவு எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணி அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடாது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிட விட்டுக்கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்சிகளின் கூட்டணி நெருக்கம் பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஹீரோ பாஜ்பாய் கூறும்போது, “இது சந்தர்ப்பவாத கூட்டணி, முழுக்க மக்கள் விரோத கூட்டணி” என்றார். #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha
லக்னோ:
குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் அயோத்திக்கு வர உள்ளார். அங்கு சிறப்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.
அப்போது சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலை 152 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சிலை படேல் சிலையை விட 30 மீட்டர் உயரம் குறைவாக இருக்கும்.

அயோத்தி சரயூ நதி ஓரமாக சிலை அமைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் சிலை அமைப்பது என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இதற்கிடைய சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ் வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியதாவது:-
படேல் சிலை அமைக்க திட்டமிட்டபோதே ராமர் சிலையையயும் அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கலாம். அதை யார் தடுத்தது.
படேல் சிலையை விட ராமருக்கு சிறிய சிலையை அமைக்க திட்டமிடுகிறார்கள். அதாவது பிரதமர் அமைத்த சிலையைவிட உயரமான சிலை அமைக்க கூடாது என்ற எண்ணம் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது.
சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட ராமர் சிலை உயரமாக கட்டப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்ல ராம்பூரிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #RamStatue #SamajwadiParty
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.
இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls