செய்திகள்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அக்டோபர் 4-ம் தேதி இந்தியா வருகை

Published On 2018-09-29 00:13 GMT   |   Update On 2018-09-29 00:30 GMT
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வரும் 4-ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. #VladimirPutin
புதுடெல்லி :

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வரும்ம் அக்டோபர் 4-ம் தேதி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் தாக்கம் பற்றி பிரதமர் மோடியிடம் விவாதிக்க உள்ளார்.

மேலும், பல்வேறு பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளார்கள். இந்தியா-ரஷியா இடையே ராணுவம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள்.

இந்தியா வரும் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். #VladimirPutin
Tags:    

Similar News