செய்திகள்

முசாபர்பூர் நகர முன்னாள் மேயர் சுட்டுக் கொலை - பீகாரில் பரபரப்பு

Published On 2018-09-23 15:29 GMT   |   Update On 2018-09-23 15:29 GMT
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் முன்னாள் நகர மேயர் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Muzaffarpurformermay #SamirKumar #Muzaffarpur
பாட்னா:

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்தவர் சமிர் குமார். லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த இவர் இன்றிரவு முசாபர்பூர் நகருக்கு உட்பட்ட பனாரஸ் பங்க் சவுக் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இயந்திர துப்பாக்கிகளால் சமிர் குமாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் சமிர் குமார் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். #Muzaffarpurformermay #SamirKumar  #Muzaffarpur
Tags:    

Similar News