செய்திகள்

ஆந்திராவில் சினிமா தியேட்டரில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின

Published On 2018-09-17 03:52 GMT   |   Update On 2018-09-17 03:52 GMT
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சினிமா தியேட்டரில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி உள்ளன. #AndhraFire #VisahapatnamCinemaHall
விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜூவாகா பகுதியில் ஸ்ரீ கன்யா சினிமா ஹால் உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தியேட்டரின் தரைத்தளத்தில் பற்றிய தீ, மளமளவெனப் பரவி கூரை வரை பற்றி எரிந்தது. இதனால் கூரையில் இருந்து பல அடி உயரம் நெருப்பு பிளம்பாக காட்சியளித்தது.

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளன.  தீப்பிடித்தபோது ஒருசில ஊழியர்கள் மட்டுமே தியேட்டர் வளாகத்தில் இருந்ததாகவும், அவர்கள் உடனடியாக வெளியேறிவிட்டதாவும் தெரிகிறது. தீயை முழுமையாக அணைத்தபிறகே சேத விவரம் தெரியவரும். #AndhraFire #VisahapatnamCinemaHall
Tags:    

Similar News