செய்திகள்
மும்பை கிரிஸ்டல் டவர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
மும்பை கிரிஸ்டல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MumbaiFire #CrystalTowerFire
மும்பை:
தீயணைப்பு படையினர் சென்ற சிறிது நேரத்தில் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து வெளியான புகையின் அளவு படிப்படியாக அதிகரித்து 4-ம் நிலையை எட்டியது. தீப்பிழம்புகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த தளத்தில் இருந்தவர்கள் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
மூச்சுத்திணறல் மற்றும் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MumbaiFire #CrystalTowerFire
மும்பையில் மிகவும் பரபரப்பான பரேல் பகுதியில் உள்ளது இந்துமாதா சினிமா. இதன் அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது தளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியானதால் அந்த தளத்தில் குடியிருந்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், 10 வாகனங்களில் விரைந்தனர்.
தீயணைப்பு படையினர் சென்ற சிறிது நேரத்தில் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து வெளியான புகையின் அளவு படிப்படியாக அதிகரித்து 4-ம் நிலையை எட்டியது. தீப்பிழம்புகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த தளத்தில் இருந்தவர்கள் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
மூச்சுத்திணறல் மற்றும் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MumbaiFire #CrystalTowerFire