செய்திகள்
கேரள கனமழை - அசாம் அரசு ரூ.3 கோடி, மணிப்பூர் அரசு ரூ.2 கோடி நிவாரண நிதி அறிவிப்பு
கேரள மாநிலத்தை சின்னாபின்னப்படுத்தியுள்ள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரண நிதியாக அசாம் மாநில அரசு ரூ.3 கோடி, மணிப்பூர் மாநில அரசு ரூ.2 கோடி அறித்துள்ளது. #KeralaReliefFund
கவுகாத்தி :
கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புவர்களை ஒருங்கினைக்கும் தொலைத்தொடர்பு உதவி மையங்களை அமைக்கும்படி அம்மாநில பேரிடர் மீட்புத்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர் சர்பானந்தா சோனோவால், கேரளாவிற்கு ரூ.3 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புவர்களை ஒருங்கினைக்கும் தொலைத்தொடர்பு உதவி மையங்களை அமைக்கும்படி அம்மாநில பேரிடர் மீட்புத்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர் சர்பானந்தா சோனோவால், கேரளாவிற்கு ரூ.3 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரள மக்களுக்கு மணிப்பூர் மக்கள் துணை நிற்பார்கள் என கூறிய அம்மாநில முதல்வர் பிரென் சிங், நிவாரண நிதியாக ரூ.2 கோடி வழங்கப்படும் என கூறினார்.
கனமழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaReliefFund