செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2018-08-19 19:48 GMT   |   Update On 2018-08-19 19:48 GMT
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #PMModi
ஜகர்த்தா :

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது.

இதனால், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ட்விட்டர் மூலமாக பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதலில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை முதலில் துவத்தி வைத்த ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து,  மல்யுத்தத்த போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவை பாராட்டியும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளின் இரண்டாம் நாளில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் மங்கோலியா மற்றும் தாய்லாந்துடன் 9-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.#AsiansGames2018 #PMModi
Tags:    

Similar News