செய்திகள்

பாகிஸ்தானி வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபர் சிக்கினார்

Published On 2018-08-11 19:53 GMT   |   Update On 2018-08-11 19:53 GMT
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #PakistaniWhatsApp
ஜெய்ப்பூர்:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரை சேர்ந்தவர் அயன். இவர் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஓடடலில் தங்கி வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் கோட்வாலி போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு படைப்பிரிவினர் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, ஓட்டலில் தங்கியிருந்த அயனின் செல்போனை சோதனை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுக்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நட்த்தி வருகின்றனர். #PakistaniWhatsApp
Tags:    

Similar News