செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு

Published On 2018-08-01 05:59 GMT   |   Update On 2018-08-01 05:59 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மேலும் நீட்டித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
புதுடெல்லி:

ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை செப்டம்பர் 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #PChidambaram #INXmediacase
Tags:    

Similar News