செய்திகள்

மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ1.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2018-07-28 13:21 GMT   |   Update On 2018-07-28 13:21 GMT
மணிப்பூரில் மியான்மர் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ1.25 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இம்பால் : 

மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்டதில் உள்ள பல்லேல் சோதனை சாவடியில் வழக்கம் போல் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மியான்மரில் இருந்து 4.15 கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 1.25 கோடி ஆகும். இதுதொடர்பாக கடத்தல்காரர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News