செய்திகள்

நொய்டா கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published On 2018-07-18 15:33 GMT   |   Update On 2018-07-18 16:44 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 5 பிரேதங்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர். #GreaterNoidaBuildingCollapse
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்தது.

இதில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவுப்படி, மீட்புப் பணிகளை கண்காணிக்க மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் உள்ளூர் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றிரவு 8 மணி நிலவரப்படி, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் மேலும் சில பிரேதங்கள் புதையுண்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. #GreaterNoidaBuildingCollapse
Tags:    

Similar News