செய்திகள்

துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தை இணைக்க துணியால் கட்டிய ஊழியர்கள் - வைரலாகும் புகைப்படம்

Published On 2018-07-10 22:04 GMT   |   Update On 2018-07-10 22:04 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தை துணியால் இணைத்து கட்டியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #RailwayTrack, #Tying cloth
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு ரெயில்வே சார்பில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவண்டி மற்றும் மான்கர்ட் ரெயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது

தகவல் அறிந்து அங்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரிப்படுத்த முனைந்தனர். தண்டவாளத்தை இணைக்க துணியால் கட்டுப் போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்க்ளில் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து மேற்கு ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறுருகையில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதி என்பதை கண்டுபிடிக்கவே துணியை கட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்
#RailwayTrack, #Tying cloth
Tags:    

Similar News