செய்திகள்

அமேதியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தாருடன் ராகுல் காந்தி சந்திப்பு

Published On 2018-07-04 10:12 GMT   |   Update On 2018-07-04 10:12 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதியில் உள்ள விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இருநாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்தார். #RahulGandhi #AmethiJaisMandi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டம் ஜைஸ் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய விளைபொருள் கொள்முதல் கூடம் உள்ளது.

இந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான அப்துல் சத்தார் என்பவர் தனது வயலில் விளைந்த கோதுமையை இந்த கொள்முதல் கூடத்தில் விற்பதற்காக கடந்த புதன்கிழமை கொண்டு சென்றார்.

ஆனால், அங்கு போதுமான சாக்குப்பைகள் இல்லாததால் இரண்டு நாட்கள் கொள்முதல் கூடத்தின் அருகே காத்திருந்து விவசாயி அப்துல் சத்தார்(38) கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்திவரும் நிலையில் இருநாள் பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அப்துல் சத்தார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #RahulGandhi #AmethiJaisMandi
Tags:    

Similar News