செய்திகள்

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டம் - எஸ்பிஐ வங்கி

Published On 2018-05-22 09:53 GMT   |   Update On 2018-05-22 09:53 GMT
கடந்த 2016-17 நிதியாண்டின் நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் ரூ.7718 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. #SBI
புதுடெல்லி:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 2016-17 ஆண்டின் நான்காவது காலாண்டு வரவு - செலவுகளை தாக்கல் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்துள்ளது.

இதே காலாண்டில் வங்கி ரூ.7718 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் வங்கி ரூ.2814 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. செயலற்ற சொத்துகள் மூலம் அதிக கடன் அளிக்கப்பட்டதால் இந்த நஷ்டத்தை வங்கி சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SBI 
Tags:    

Similar News