செய்திகள்
தொடர் குண்டு வெடிப்புக்கு சதி செய்த பயங்ரவாதி மும்பையில் கைது
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
மும்பை:
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
மும்பை மேற்கு பகுதியில் உள்ள புறநகரில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஒரு பயங்ரவாதி பதுங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் தனிப்படை மும்பைக்கு விரைந்து வந்தது. மும்பை போலீசாரும், கொல்கத்தா போலீசாரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பயங்ரவாதி பிடிபட்டான். அவனது பெயர் மிர்சா பைசல் கான் என்று தெரிய வந்துள்ளது. 32 வயதாகும் இவன் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன்.
சில மாதங்களுக்கு முன்பு இவன் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். வெடி குண்டு தயாரிப்பதோடு தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கும் அவன் பயிற்சி பெற்றான்.
கடந்த வாரம் அவன் மும்பை திரும்பி இருந்தான். கொல்கத்தா போலீசாருக்கு அவனை பற்றிய தகவல்கள் கிடைத்ததால் சரியான நேரத்தில் பிடிபட்டுள்ளான்.
பயங்ரவாதி மிர்சா பைசல்கான் மராட்டியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரை கடத்தி கொண்டு கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். பிரபல இந்தி நடிகர் ஒருவருக்கும் அவன் குறிவைத்து இருந்தான்.
இவை தவிர இந்தியாவில் சில நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அவன் சதி திட்டம் தீட்டி இருந்தான். பாகிஸ்தானில் உள்ள பயங்ரவாதிகள் உத்தரவு வந்ததும் தனது சதி திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தான். அதற்கு முன்னதாக அதிரடி போலீசார் அவனை பிடித்துவிட்டனர். அவனை 21-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #tamilnews
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
மும்பை மேற்கு பகுதியில் உள்ள புறநகரில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஒரு பயங்ரவாதி பதுங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் தனிப்படை மும்பைக்கு விரைந்து வந்தது. மும்பை போலீசாரும், கொல்கத்தா போலீசாரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பயங்ரவாதி பிடிபட்டான். அவனது பெயர் மிர்சா பைசல் கான் என்று தெரிய வந்துள்ளது. 32 வயதாகும் இவன் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன்.
சில மாதங்களுக்கு முன்பு இவன் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். வெடி குண்டு தயாரிப்பதோடு தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கும் அவன் பயிற்சி பெற்றான்.
கடந்த வாரம் அவன் மும்பை திரும்பி இருந்தான். கொல்கத்தா போலீசாருக்கு அவனை பற்றிய தகவல்கள் கிடைத்ததால் சரியான நேரத்தில் பிடிபட்டுள்ளான்.
பயங்ரவாதி மிர்சா பைசல்கான் மராட்டியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரை கடத்தி கொண்டு கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். பிரபல இந்தி நடிகர் ஒருவருக்கும் அவன் குறிவைத்து இருந்தான்.
இவை தவிர இந்தியாவில் சில நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அவன் சதி திட்டம் தீட்டி இருந்தான். பாகிஸ்தானில் உள்ள பயங்ரவாதிகள் உத்தரவு வந்ததும் தனது சதி திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தான். அதற்கு முன்னதாக அதிரடி போலீசார் அவனை பிடித்துவிட்டனர். அவனை 21-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #tamilnews