செய்திகள்

வரதட்சணை கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து புதுப்பெண்ணை கற்பழித்த கணவன்

Published On 2018-04-24 05:51 GMT   |   Update On 2018-04-24 05:51 GMT
அசாம் தெற்கு பகுதியில் சமீபத்தில் திருமணமான புதுப்பெண்ணை வரதட்சணை கொடுக்காததால் கணவர் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி:

அசாம் தெற்கு பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.

திருமணத்தின் போது வரதட்சணை கொடுக்க பெண் வீட்டாரால் முடியவில்லை. வரதட்சணை கொடுக்காததால் கணவர் ஆத்திரம் அடைந்தார்.

திருமணமான 3-வது நாளில் அவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனைவியை கற்பழித்தார். கடந்த 17-ந் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து புதுப்பெண் போலீசில் நேற்றுதான் புகார் அளித்தார்.

போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து புதுபெண்ணின் கணவர் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக அங்கு 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதானவர் கற்பழித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். #Tamilnews
Tags:    

Similar News