செய்திகள்

மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2018-04-23 18:52 GMT   |   Update On 2018-04-23 18:52 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிமல்கட்டா என்ற இடத்தில் உள்ள ராஜாராம் கண்ட்லா வனப்பகுதியில் இன்று நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே தீவிர துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்று முன்தினம் இதே பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News