செய்திகள்

மும்பையில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

Published On 2018-04-21 22:05 GMT   |   Update On 2018-04-21 22:05 GMT
மும்பையின் தியோனர் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையின் தியோனர் பகுதியில் நேற்று முன்தினம் 9 வயது சிறுமி ஒருவர் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மேற்கொண்டு விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதான அந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

சிறுமிகள் கற்பழிப்பு சம்பவத்தில் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) தண்டனையை அதிகரிப்பது குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது இந்த சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News