செய்திகள்

தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் - பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

Published On 2018-04-14 03:09 GMT   |   Update On 2018-04-14 03:09 GMT
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என கூறியுள்ளார். #PMModi #TamilNewYear

புதுடெல்லி:

தமிழ் மாதங்களில் சித்திரை திங்களின் முதல்நாள் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அந்நாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின்போது தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, வழக்கம்போல் சித்திரை திங்களின் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக அங்கீகரித்து உத்தரவிட்டார்.



இந்நிலையில், பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.”. இவ்வாறு அவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #TamilNewYear
Tags:    

Similar News