செய்திகள்
குக்கர் சின்னத்தை எதிர்த்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
ஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.