செய்திகள்

தெஹ்ரீக்-இ-ஹூரியத் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்வு

Published On 2018-03-19 10:49 GMT   |   Update On 2018-03-19 10:49 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெஹ்ரீக்-இ-ஹூரியத் பிரிவினைவாத இயக்கத்தின் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #geelani #TehreekeHurriyat
ஸ்ரீநகர்:

தெஹ்ரீக்-இ-ஹூரியத் என்ற பிரிவினைவாத இயக்கமானது  2003-ம் ஆண்டு ஹூரியத் மாநாடு என்ற அமைப்பிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.

சையத் அலி ஷா கிலானி

இந்நிலையில், புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிலானி பதவியிலிருந்து விலக முடிவெடுத்ததை தொடர்ந்து கட்சி தலைவர்கள் அஷ்ரபை தலைவராக தேர்ந்தெடுத்தனர். #geelani #TehreekeHurriyat #tamilnews

Tags:    

Similar News