செய்திகள்

இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்.ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு

Published On 2018-02-21 13:00 GMT   |   Update On 2018-02-21 13:00 GMT
பாகிஸ்தான் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் இன்று காஷ்மீர் பகுதியில் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pakistanicopter
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்ட சர்வதேச எல்லைக்கோடு பகுதி அருகே இன்று காலை சுமார் 10 மணியளவில் பாகிஸ்தான் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததாக இன்று பிற்பகல் வாக்கில் தகவல் வெளியானது.

இதில் வான் எல்லை அத்துமீறல் ஏதுமில்லை என்று இந்திய ராணுவத்தின் தரப்பில் முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய வான் எல்லைக்குள் சுமார் 300 மீட்டர் அளவில் முன்நோக்கி வந்த அந்த ஹெலிகாப்டர் பின்னர் திரும்பி சென்று விட்டதாகவும், இருதரப்பிலும் துப்பாக்கிச்சூடு ஏதும் நடக்கவில்லை என்றும் இன்று மாலை மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. #tamilnews #Pakistanicopter
Tags:    

Similar News