செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணியை கற்பழித்த கும்பல்

Published On 2018-01-21 09:47 GMT   |   Update On 2018-01-21 09:47 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
படூன்:

உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படூன் மாவட்டம் காஞ்சுலா கிராமத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி.

கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றது. அங்குள்ள காட்டுப் பகுதியில் கர்ப்பிணி பெண்ணை 3 பேரும் கற்பழித்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அந்த பெண்ணை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர். காட்டுப் பகுதியில் சுயநினைவில்லாமல் கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News