செய்திகள்
உ.பி: முதல் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து - போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் முதலாம் வகுப்பு மாணவனை பள்ளியில் பயிலும் மூத்த மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பிரைட்லண்ட் என்ற தனியார் பள்ளியில்முதலாம் வகுப்பு மாணவன் ரித்திக் பள்ளி கழிவறைக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் மாணவன் சிறுவன் ரித்திக்கை கத்தியால் குத்தியது தெரியவந்தது. அம்மாணவனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பள்ளியில் உள்ள சிசிடிவி பதிவேட்டை சோதனை செய்த போலீசார் எந்த தகவலும் கிடைக்க வில்லை என தெரிவித்தனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என கூறினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பிரைட்லண்ட் என்ற தனியார் பள்ளியில்முதலாம் வகுப்பு மாணவன் ரித்திக் பள்ளி கழிவறைக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் மாணவன் சிறுவன் ரித்திக்கை கத்தியால் குத்தியது தெரியவந்தது. அம்மாணவனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பள்ளியில் உள்ள சிசிடிவி பதிவேட்டை சோதனை செய்த போலீசார் எந்த தகவலும் கிடைக்க வில்லை என தெரிவித்தனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என கூறினர்.