செய்திகள்

சொந்த ஊர் மண்ணை எடுத்து நெற்றியில் பூசிய பிரதமர் மோடி

Published On 2017-10-08 05:08 GMT   |   Update On 2017-10-08 05:08 GMT
குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். பின்னர், கார் மூலம் தான் படித்த பள்ளிக்கு சென்ற மோடிக்கு அவரது ஆதரவாளர்கள் இரு புறமும் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் காரில் இருந்து இறங்கிய மோடி கீழே உள்ள மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக்கொண்டார். அங்கு இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மோடி குஜராத் மாநிலத்திற்கு அடிக்கடி வருகை தருகிறார். மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு அம்மாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணிகளை நடத்தினர்.

இதனால், தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் பா.ஜ.க அம்மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News