செய்திகள்
பள்ளி ஆசிரியையிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவர் அடித்துக்கொலை
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவரை கிராமத்தினர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திஸ்பூர்:
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்ஷஸ்மாரி பெலாகுரி கிராமத்தில் நேற்று காலை அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜன் குரா என்பவர் அவரை வழிமறித்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.
பள்ளி ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மக்கள் கூடினர். அவர்கள் ராஜனை அடித்து உதைத்தனர். இதில் ராஜன் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜன் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மாநிலத்தின் பல பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனால் பாதுகாப்பு குறித்து பெண்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்ஷஸ்மாரி பெலாகுரி கிராமத்தில் நேற்று காலை அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜன் குரா என்பவர் அவரை வழிமறித்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.
பள்ளி ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மக்கள் கூடினர். அவர்கள் ராஜனை அடித்து உதைத்தனர். இதில் ராஜன் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜன் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மாநிலத்தின் பல பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனால் பாதுகாப்பு குறித்து பெண்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.