செய்திகள்

ஜீப் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் பலி

Published On 2017-09-25 12:31 GMT   |   Update On 2017-09-25 12:31 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஜீப் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தின் பக்ஸ்வாகா மற்றும் கிராபூர் நகரை இணைக்கும் சாலையில் இன்று காலை ஜீப் மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

லாரியானது சட்டாபூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜீப்பில் பயணம் செய்தவர்கள் திகம்கார் மாவட்டத்தில் உள்ள பகஜ்மாதா ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 12க்கும் பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News