செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் மூத்த பத்திரிக்கையாளர்-தாயார் படுகொலை
பஞ்சாப் மாநிலத்தில் மூத்த பத்திரிக்கையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாயார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிரபல ஆங்கில நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.ஜே.சிங். இவர் 92-வயது தாயாருடன் மொகாலியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று சிங் மற்றும் அவரது தாயார் இருவரும் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் உடலில் காயம் இருப்பதால் கொலையாக இருக்கும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சிங் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மற்றும் அவரது தாயாரும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அதனால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறோம், என தெரிவித்தார்.
மூத்த பத்திரிக்கையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாயார் படுகொலை செய்யப்பட்டதற்கு ஷிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிரபல ஆங்கில நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.ஜே.சிங். இவர் 92-வயது தாயாருடன் மொகாலியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று சிங் மற்றும் அவரது தாயார் இருவரும் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் உடலில் காயம் இருப்பதால் கொலையாக இருக்கும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சிங் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மற்றும் அவரது தாயாரும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அதனால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறோம், என தெரிவித்தார்.
மூத்த பத்திரிக்கையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாயார் படுகொலை செய்யப்பட்டதற்கு ஷிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.